உன்னைத்தான் எழுதுகின்றேன் வரியாக,
நீயே எந்தன் ஒளியாக,
உயிரைக் கொண்டு வார்த்தைகளை உருக்கி
எடுக்கின்றேன் சிலையாக...
கண்கள் இருண்டு
தூக்கம் வந்தாலும்,
தூங்க முடியாமல்
கண்ணுக்குள்ளே உன் நினைவு,
போர்வை இழுத்துப்
போர்திக் கொண்டால்
மார்புக்குள்ளும்
உன் கனவு.
விட்டு விட்டுத் துடிக்கின்றது இதயம்
உயிருக்குள்ளே நீ நுழைய,
முட்டி முட்டி அழைக்கின்றது இமைகள்,
இருவரும் ஒன்றாய் இணைய....
கவிதையில் தான் காதலென்றால்
காலம் அதை ஏற்காது,
காதலித்தவன் எல்லாம் கவிஞனென்றால்
காவியங்கள் நிலைக்காது.
கை பிடித்து இணைய வந்தால்
கை நழுவிச் செல்கின்றாய்
கற்பனையில் நீ வந்து
கவியாக மலர்கின்றாய்....